Don't Miss!
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வான்கடே செல்ல விருப்பமில்லை... வீட்டிலேயே ஜாலியாக மேட்ச் பார்க்கிறேன்: ஷாரூக்
மும்பை: மும்பை வான்கடே கிரிக்கெட் அரங்கத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருந்து டிவியில் கிரிக்கெட் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார் நடிகர் ஷாரூக்கான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளரான இந்தி நடிகர் ஷாருக்கான் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது பிரச்சினையில் சிக்கினார். மும்பை வான்கடே கிரிக்கெட் அரங்கத்துக்குள் சென்றபோது, அவருக்கு காவலாளியுடன் தகராறு ஏற்பட்டது.
இதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வான்கடே கிரிக்கெட் அரங்கத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் தடை விதித்தது.
இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹாரூக்கான், 'வீட்டில் இருந்து கிரிக்கெட் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது :-
வான்கடே செல்ல விருப்பமில்லை...
வான்கடே கிரிக்கெட் அரங்கத்தில் நுழைய எனக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் தடை விதித்ததை தொடர்ந்து நான் அங்கு செல்லவில்லை. அங்கு செல்லவும் விரும்பவில்லை.
ரொம்ப சந்தோஷம் பாஸ்...
நான் எனது வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கிறேன். இதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு காலம் வரும்....
வான்கடே அரங்கத்துக்கு வந்து கிரிக்கெட் போட்டியை காணவருமாறு என்னை அழைக்கும் காலம் வரும். அதை நாம் பார்க்க தான் போகிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆர்வம்...
அதேபோல், வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளைக் காண தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என் குழந்தைகள்...
மேலும், தனது அணியின் வீரர்கள் தனது குழந்தைகள் போன்றவர்கள். எனவே, வெற்றியோ, தோல்வியோ அவர்களை மாற்றும் எண்ணமில்லை என்கிறார் ஷாரூக்.