நயன், நஸ்ரியா மோதலுக்கு ஆர்யா தான் காரணமா?
சென்னை: நயன்தாரா நஸ்ரியா மோதலுக்கு ஆர்யா தான் காரணம் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
நய்யாண்டி படத்தில் தொப்புள் விவகாரத்தை நஸ்ரியா பெரிதுபடுத்தினார். இது குறித்து நயன்தாராவிடம் கேட்டதற்கு, கமர்ஷியல் காரணங்களுக்காக கவர்ச்சியை பயன்படுத்துவது சாதாரணம் என்று தெரிவித்தார். அதற்கு நஸ்ரியா நயனுக்கு பதிலடி கொடுத்தார்.

அறிவுரை தேவையில்லை
நயனின் அறிவுரை எனக்கு ஒன்றும் தேவையில்லை. என் விஷயத்தில் அவர் தலையிடுவது எனக்கு பிடிக்கவில்லை என்று நஸ்ரியா தெரிவித்தார்.

ராஜா ராணியில்
ராஜா ராணி படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த வேலையில் நஸ்ரியா சேர்க்கப்பட்டார். நஸ்ரியா ஷூட்டிங்கிற்கு வரும்போதெல்லாம் ஆர்யா அவரை கலாய்ப்பதும், கடலை போடுவதுமாக இருந்துள்ளார். இந்த படப்பிடிப்பின்போது நயன், ஆர்யா இடையே நெருக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடலை
ஆர்யா கடலை போட்டது நயன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இல்லாத நேரத்திலாம். ஆனால் படக்குழுவினரோ இந்த கடலை விஷயத்தை நயனிடம் தெரிவித்துள்ளனர்.

திருந்தாத கேஸ்
ஆர்யா ஷூட்டிங்ஸ்பாட் வந்தாலே இப்படித் தான் அவரை திருத்த முடியாது என்று நினைத்த நயன் நஸ்ரியாவை டீசன்ட்டாக எச்சரித்துள்ளார். அதன் பிறகு நய்யாண்டி விஷயத்தில் நயன் நஸ்ரியாவை விளாச, பதிலுக்கு நஸ்ரியா விளாச மோதல் முற்றியுள்ளது. இத்தனைக்கும் காரணம் ஆர்யா தான் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











