twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மம்முட்டியிடம் விடிய, விடிய விசாரணை

    By Siva
    |

    Mammootty
    மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியிடம் வருமான வரித்துறையினர் விடிய, விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் நேற்று காலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இந்த நட்சத்திரங்களின் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 80 அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.

    இந்த சோதனைகளில் ரொக்கம், ஆவணங்கள், யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.

    இதில் மம்முட்டியின் கொச்சி வீட்டில் இருந்து மட்டும் ரூ. 20 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    இந்த சோதனைகள் நடந்தபோது மம்முட்டி சென்னையில் இருந்தார். நேற்றிவு 9 மணிக்கு கொச்சி சென்ற அவரிடம் வருமானவரித்துறையினர் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

    அவரிடம் ரூ. 20 லட்சம் ரொக்கம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே மோகன் லால் அனுமதி பெற்றுத் தான் வீட்டில் தந்தங்கள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Income tax department conducted raid in the houses of the 2 most famous heroes in Malayalam cine industry namely Mammootty and Mohanlal. They have confiscated cash , documents and ivory in these raid. IT officials have quizzed Mammootty.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X