ஊட்டியில் மோகன்லால் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை!

கேரள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் வீடுகளில் மத்திய வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 22-ந்தேதி சோதனை நடத்தினார்கள். கேரளாவில் உள்ள இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள், ஊட்டி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளிலும் இந்த சோதனைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் நேற்று காலை ஊட்டியில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் 2-வது முறையாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
இதேபோல் கேரளாவில் உள்ள மோகன்லால் வீட்டிலும் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினார்கள்.
மோகன் லால் மற்றும் மம்முட்டிக்கு நிழல் உலக தாதாக்களுடன் மறைமுக தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த சோதனைகள் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications