Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்
சென்னை: சினிமா துறையை சேர்ந்த பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்து வேச வேண்டிய நேரம் இது என்கிறார் விஷால்.
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். அவரின் துணிச்சலை பார்த்து பல நடிககைள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.
|
விஷால்
நம் துறையை சேர்ந்த பெண்கள் பேச வேண்டிய நேரம் இது. நான் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பேன். அவர்களை பாதுகாக்க குழு அமைப்பேன். நான் சின்மயி, தனுஸ்ரீ தத்தா மற்றும் பிறரை மதிக்கிறேன். சம்பவம் நடந்த உடனே பெண்கள் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். அமலா பால் அது போன்று எங்களிடம் புகார் தெரிவித்தார். நாங்கள் அவருக்கு உதவி செய்தோம். #MeToo #TimesUp என்று விஷால் ட்வீட்டியுள்ளார்.
|
சின்மயி
விஷாலின் ட்வீட்டை பார்த்த சின்மயி அவரின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அப்போது விழிப்புணர்வு இல்லை. யாரையும் தெரியாது என்று சம்பவம் நடந்த உடனே புகார் தெரிவிக்காதது குறித்து கூறியுள்ளார் சின்மயி.
|
நடிகர் சங்கம்
நடிகர் சங்க பிரச்சனையையே உங்களால் தீர்த்து வைக்க முடியவில்லை. இதில் இதை எப்படித் தீர்த்து வைப்பீர்கள் விஷால்.
|
ஸ்ரீ ரெட்டி
தமிழ் திரையுலகில் உள்ள சிலர் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்தார். அந்த விவகாரம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
|
நடிகைகள்
இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது நடப்பது எல்லாம் உங்களுக்கு தெரியாதாக்கும்? கடைசி நேரத்தில் வந்து சமாளிக்கிறார் விஷால் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.