Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சம்சார சாகரத்தில் சல்மானும் குதிக்கப் போறாராமே... வெளிநாட்டு காதலியை மணக்கிறார்!
மும்பை: சமீபத்தில் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகர் சல்மான்கான், விரைவில் தனது வெளிநாட்டுக் காதலியான லூலியாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு தற்போது 50 வயதாகிறது. ஆனாலும் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இதுவரை தன்னுடன் நடித்த நடிகைகள் பலருடனும் சேர்த்து அவரது பெயர் கிசுகிசுக்கப்பட்டது. சங்கீதா பிஜ்லானி, ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப், ஜாக்குலின் பெர்னாண்டஸ் என அந்த காதலிகளின் பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இவர்களில் பலருக்கு வேறொருவருடன் திருமணமும் நடந்து விட்டது.
ஆனபோதும், தொடர்ந்து சல்மான்கான் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
லூலியா...
இந்நிலையில், சல்மான்கான் தற்போது ருமேனிய அழகி லூலியா என்பவரைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. லூலியாவைத் தனது தோழி என மற்றவர்களிடம் அவர் அறிமுகப்படுத்தினாலும், அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாகவே இருந்து வருகிறது.
பிறந்தநாள் விழாவில்...
சமீபத்தில் தனது 50 பிறந்தநாளைக் கொண்டாடினார் சல்மான். பிரபல பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்ட அந்தப் பிறந்தநாள் விழாவில், கேக்கை வெட்டியதும் லூலியாவுக்கு ஊட்டி விட்டார் சல்மான். இதன் மூலம், அவர்களது காதல் உறுதியானது.
புத்தாண்டு கொண்டாட்டம்...
மும்பையில் உள்ள பண்ணை வீட்டில் சல்மான்கான் புத்தாண்டை கொண்டாடியபோது அதிலும் லூலியா கலந்து கொண்டார். அங்கிருந்த குதிரையில் சவாரி செய்து பண்ணையை சுற்றியும் வந்தார். இந்தப் படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
விரைவில் திருமணம்...
இதைதொடர்ந்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, திருமண நிச்சயதார்த்தத்தை ரகசியமாக நடத்தி முடித்து விட்டதாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
வழக்கு காரணமாக...
குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தி சாலையோரத்தில் படுத்து தூங்கிய ஒருவர் சாக காரணமாக இருந்ததாக சல்மான்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 3 வருடமாக நடந்த இந்த வழக்கில் இருந்து சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்தே அவரது திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.