அஜீத் ரூட்டில் ஜெய்... முதல் முறையாக கார் பந்தயத்தில் பங்கேற்கிறார்!
சென்னை: அஜீத்தைப் போலவே, நடிகர் ஜெய்யும் கார் பந்தயத்தில் பங்கேற்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.
முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ள ஒரு தேசிய கார் பந்தயத்தில் அவர் பங்கேற்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள தேசிய கார் பந்தயப் போட்டியில் நான் பங்கேற்கிறேன்.

இரண்டு சுற்றுகள் சென்னையிலும், பின்னர் கோவையிலும் நடைபெறும் இந்தப் பந்தயத்தின் இறுதிப்போட்டி டெல்லியில் நடக்கிறது. பார்முலா பந்தயத்தில் பங்கு பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த போட்டிதான் அடிப்படை.
நான் கடந்த ஏழு மாதங்களாக இந்தப் போட்டிக்காக பயிற்சி பெற்று வருகிறேன். இருந்தாலும் இப்போதும் பதட்டமாகத்தான் இருக்கிறது. முதல் ஐந்து இடத்திற்குள் நான் முடிக்கவேண்டும். அப்போதுதான் அடுத்த சுற்றுக்கு வரமுடியும்.
சிறு வயதிலிருந்தே கார் பந்தயத்தில் எனக்கு விருப்பம் அதிகம். அப்துல்லா என்ற வீரரைச் சந்தித்த பிறகே இதில் இறங்க முடிவு செய்தேன். என்னால் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் இரு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தம் நடிகர் அஜீத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு தைரியம் வந்தது.
அதன்பிறகுதான் ஞாயிற்றுக் கிழமைகளில் கார் பந்தயத்தில் நான் தனிப்பட்ட கவனம் செலுத்தத் தொடங்கினேன். எனது இந்த ஆர்வத்திற்கு தடை போடாமல் தயாரிப்பாளர்களும் எனது கால்ஷீட்டை பயன்படுத்திக் கொள்கிறார்கள்," என்றார்.


Click it and Unblock the Notifications











