ஜெய்க்கு ரிச்சா 'சூட்' ஆகலையாம்!

By Mayura Akilan

Richa
இயக்குநர் கவுதம் மேனன் தயாரிக்கும் "தமிழ்செல்வனும், தனியார் அஞ்சலும்!" திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெய் நடித்து வருகிறார். இது தெலுங்கில் "கூரியர் பாய் கல்யாண்" என்ற பெயரில் தயாராகிவருகிறது.

தமிழ் படத்தில் ஜெய்க்கு ஏற்ற ஜோடி கிடைக்கவில்லையாம். முதலில் அபிநயாவிடம் பேசியிருக்கின்றனர் ஆனால் அவரால் கவுதம் கேட்ட தேதியில் நடிக்க முடியவில்லை. ஒஸ்தி நாயகி ரிச்சாவை வைத்து போட்டோ செஷன் எடுத்துள்ளனர். ஆனால் நாயகனை விட நாயகி கொஞ்சம் மெச்சூரிட்டியாக தெரிந்ததால் வேண்டாம் என்று கவுதம் ஒதுக்கிவிட்டார். அதனால், இப்போது, ஜெய்க்கு பொருத்தமான வேறு நடிகையை தேடி வருகின்றனர்.

சமீபத்தில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, ஐந்து நாட்கள் மட்டும் ஐதராபாத்தில் நடந்தது. திடீரென மழை கொட்டியதால், மூன்று நாட்கள், சில காட்சிகளை மட்டும் எடுத்துவிட்டு, சென்னை திரும்பிவிட்டனராம்.

இந்தப் படம் நிச்சயம் தன்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று படத்தின் நாயகன் ஜெய் கூறிவருகிறார். மேலும், எப்படியெல்லாம் நடிக்க வேண்டும்; எந்த மாதிரியான உடைகளை தேர்வு செய்ய வேண்டும் என, படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும், கவுதம்மேனன் ஆலோசனை சொல்கிறார் என்றார் ஜெய்.

அதெல்லாம் சரிதான் வேட்டையாடு விளையாடு, நடுநிசி நாய்கள், விண்ணைத்தாண்டி வருவாயா? நீதானே என் பொன் வசந்தம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்று எல்லமே வித்தியாசமான நீண்ட தலைப்பாக இருக்கிறதே படத்திற்கு தலைப்பு வைப்பதற்கு என்றே தனியாக ரூம் போட்டு யோசிப்பாரோ கவுதம் மேனன்.

பேசாம, ஜெய்க்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி கால்ஷீட் கிடைக்குமா என்று கேட்டுப்பாக்கலாமே கவுதம்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X