Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜெயலலிதா, ரஜினியை அடுத்து ஜெயம் ரவிக்கு கிடைத்த பாக்கியம்
Recommended Video
சென்னை: ஜெயலலிதா, ரஜினிகாந்தை அடுத்து ஜெயம் ரவி போயஸ் கார்டனில் பங்களா வாங்கியுள்ளார்.
ஜெயம் ரவி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி படத்தில் நடித்து வருகிறார். 8 கெட்டப்பில் வரும் ஜெயம் ரவி இந்த படத்திற்காக தனது உடல் எடையை 18 கிலோ குறைத்துள்ளார்.
இந்நிலையில் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அவர்.
ஜெயம் ரவி
ஸ்கிரீன் சீன் மீடியாவுடன் 3 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதில் ஜெயம் ரவி மகிழ்ச்சியில் உள்ளார். ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி சம்பளம் என மூன்று படங்களுக்கு ரூ. 24 கோடி கேட்டிருக்கிறார் அவர்.
வீடு
ஜெயம் ரவிக்கு ரூ. 24 கோடி ரொக்கம் கொடுப்பதற்கு பதில் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டை அவர் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்துவிட்டாராம் தயாரிப்பாளர். இதன் மூலம் போயஸ் கார்டனில் வீடு வாங்கும் ஜெயம் ரவியின் கனவு நிறைவேறிவிட்டதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த்
போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்தார். ரஜினிகாந்துக்கு போயஸ் கார்டனில் வீடு உள்ளது. அந்த பகுதியில் வீடு வாங்குவது சாதாரண விஷயம் இல்லை. அப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதா, ரஜினியை அடுத்து ஜெயம் ரவிக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது.
தனி ஒருவன்
ஸ்கிரீன் சீன் தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்று தனி ஒருவன் 2 என்று கூறப்படுகிறது. தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜா தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னம்மா ஓவியா திருமணம் பற்றி இப்படி சொல்லிட்டீங்களேம்மா!