twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிறைய பேர் தற்காப்புக்காகத்தான் படம் எடுக்கிறார்கள்! - ஜெயம் ரவி

    By Shankar
    |

    இங்கே நிறைய பேர் நாலு பைட், நாலு பாட்டு என்று தற்காப்புக்காகத்தான் படம் எடுக்கிறார்கள் என்றார் நடிகர் ஜெயம் ரவி.

    தற்காப்பு பட விழாவில் அவர் பேசுகையில், "என் பழைய நண்பர்களில் சக்தியும் ஒருவர். என் அப்பாவும் சுலபமாகப் பாராட்டமாட்டார். நடிக்கும்போது சுற்றிலும் இருக்கிற 40 பேரை மனதில் வைத்து நடிக்காதே தியேட்டரில் இருக்கிற பல கோடி பேருக்காக நடி என்பார்.

    Jayam Ravi's speech at Tharkappu audio launch

    என் படங்களைப் பார்த்து விட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று குறையாகவே சொல்வார். சரியில்லாத எல்லாவற்றையும் தூக்கிவிடலாம் என்பார்.

    அப்போ எது சரின்னாவது சொல்லுங்கப்பா, என்பேன்.

    அதற்கு அவர் கெட்டதை எல்லாம் எடுத்து விட்டால் மீதி எல்லாம் நல்லதுதானே என்பார். 'தற்காப்பு' நல்ல தலைப்பு. நிறைய பேர் தற்காப்புக்காகப் படம் எடுக்கிறார்கள். நாலு பாட்டு, நாலு பைட்டு கதை சுமாரா இருந்தால் போதும் என்று நிறைய பேர் தற்காப்புக்காகப் படம் எடுக்கிறார்கள். அப்படித் தற்காப்புக்காகப் படம் எடுக்காதீர்கள். நானும் அப்படித் தற்காப்புக்காக சில படங்கள் நடித்திருக்கிறேன்.

    சினிமா பொழுது போக்கும் இல்லை. கலையும் இல்லை. பார்ப்பவரை கட்டிப் போட வேண்டும் சினிமா அது போதும். நான் நடிக்க 3 ஆண்டுகள் எடுத்த படம்'தனி ஒருவன்' . அப்போது என்ன கேப் சார் 3 ஆண்டுகள் படமே இல்லை என்றார்கள். இந்த ஒரே ஆண்டு 3 படம் கொடுத்தேன். என்ன சார் இந்த ஒரே ஆண்டு 3 படம் என்கிறார்கள். மற்றவர் பேசுவதைப் பற்றி கவலைப்படாமல் உழைக்க வேண்டும் பலன் நிச்சயம் உண்டு. உதாரணம் என் 'தனி ஒருவன் 'வெற்றி," என்றார்.

    English summary
    Actor Jayam Ravi says that most of the filmmakers are taking films like self defence.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X