Don't Miss!
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
மதுரைக்காரங்களுக்கும், எனக்கும் உள்ள பந்தம்: மனம் திறந்த ஜீவா
மதுரை: மதுரைக்காரர்கள் பாசமானவர்கள் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் கவலை வேண்டாம் படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜீவா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மதுரை மக்கள்
என் படங்கள் வெற்றி படமா, தோல்வி படமா என்பதை தீர்மானிப்பதே மதுரை மக்கள் தான். அவர்கள் ஒருபோதும் என்னை கைவிட்டது இல்லை. மதுரை மக்கள் ரசனையானவர்கள். படம் குறித்து அவர்கள் தெரிவிக்கும் கருத்து சரியாக இருக்கும்.
படங்கள்
நான் இதுவரை 26 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். அதில் எத்தனை படங்கள் வெற்றி, எத்தனை தோல்வி என்பது எனக்கு தெரியாது. வெற்றி, தோல்வி பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. பிடித்ததை செய்கிறேன். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ராம்
நான் நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஆகிறது. என்னை நடிகனாக மாற்றிய படம் அமீர் இயக்கிய ராம். அமீர் மதுரைக்காரர். மதுரைக்கார்ரகள் ரொம்ப பாசமானவர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். மதுரைக்கு வந்தபோது அதை தெரிந்து கொண்டேன்.
மதுரை
மதுரைக்கு எப்பொழுது வந்தாலும் இங்குள்ள மெஸ்களில் சாப்பிடுவேன். மதுரை ஹோட்டல்களில் கிடைக்கும் கறிதோசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.