தொடரும் விவாகரத்து சர்ச்சை.. ஜெயம் ரவி வீட்டில் இருப்பதில்லையாம்.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்
சென்னை: ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கும் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவரது நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில்; அவரும் அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்யவிருப்பதாக புதிய தகவல் கடந்த மாதத்திலிருந்து பரவிவருகிறது.
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான அந்தப் படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். முதல் படமே அதிரிபுதிரி ஹிட்டடிக்க ஜெயம் ரவி அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். ஜெயம் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டானாலும் பெரும்பாலும் அவை அண்ணன் ராஜா இயக்கும் படங்களாகவே அமைந்தன. இருப்பினும் அப்படி அவர் நடித்த படங்களும் ஹிட்டாக கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். இருப்பினும் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாறக்கூடிய படத்துக்காக ஜெயம் ரவி காத்திருக்கவும் செய்தார்.

பேராண்மை: அப்படி காத்திருந்தவருக்கு பேராண்மை படம் கிடைத்தது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான அப்படத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞனாக துருவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவி. படத்துக்கு தேவையான ஆக்ஷனை அளவாகவும், நடிப்பை சிறப்பாகவும் வழங்கிய ரவியை பார்த்து கோலிவுட் ஆச்சரியம்தான் பட்டது. இதனையடுத்து ஆக்ஷன் படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த ரவி தனி ஒருவன் பட்த்தில் நடித்தார்.
மெகா ஹிட் தனி ஒருவன்: தனி ஒருவன் படம்தான் ஜெயம் ரவியை வைத்து ஜெயம் ராஜா இயக்கிய சொந்த கதை ஆகும். ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்த ரவியுடன் அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பக்கா ஆக்ஷன் த்ரில்லராகவும், சமூகத்துக்கு மெசேஜ் சொல்லும் வகையிலும் உருவான அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர்பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சைரன்: பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அடுத்ததாக அவர் நடிப்பில் சமீபத்தில் சைரன் திரைப்படம் வெளியானது. கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. முக்கியமாக ஜெயம் ரவி கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய ஹிட்டுக்காக தவித்துக்கொண்டிருக்கிறார். அடுத்ததாக அவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
மனைவி ஆர்த்தி: இதற்கிடையே ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் அன்யோன்யமாக வாழ்ந்துவந்த சூழலில்; இப்போது அவர்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே ஒரு தகவல் ஓடியது. ஆனால் கடந்த மாதம் ஜெயம் படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி; அந்தப் படம் பற்றி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டிருந்தார். அதேசமயம் அவருடன் இருந்த புகைப்படங்களையும் நீக்கிவிட்டார் ஆர்த்தி.
அந்தணன் பேட்டி: இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்துக்கு பணம்தான் காரணம் என்று ஒருதரப்பினர் கூறுகிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இதுகுறித்து பேசுகையில், "ஜெயம் ரவி இப்போது தனது வீட்டில் தங்குவதே இல்லை. இப்போது அவர் அலுவலகம் ஒருகாலத்தில் அவரது வீடாக இருந்தது. அங்குதான் அவர் தங்கிவருகிறார்" என்றார். இதற்கிடையே ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதாவால் தான் இந்தப் பிரச்னையின் ஆரம்பப் புள்ளியே வைக்கப்பட்டது என்றும் ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











