தனுஷுக்கு தினமும் ஃபோன் போட்டு சிவகார்த்திகேயன் நன்றி சொல்ல முடியுமா?.. பத்திரிகையாளர் விளாசல்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடித்த மாவீரன் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படி வரிசையாக இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த அவர்; இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். படத்தின் இறுத்திக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன. இந்தச் சூழலில் கொட்டுக்காளி பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனின் பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சில படங்கள் மட்டுமே இருப்பார்; பிறகு காணாமல் போய்விடுவார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் ஆரூடம் கூறியவர்களை ஆஃப் செய்யும் விதமாக தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு படத்துக்கு படம் உச்சம் சென்றார். அதன் காரணமாக இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் எழுதுவது, பாடுவது என்று வேறு ஜானரிலும் பிஸியாக இருக்கிறார்.

வரிசையாக ஹிட்: சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த நான்கு படங்களில் பிரின்ஸ் படம் மட்டும் தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு அவர் நடித்த மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அயலான் திரைப்படம் லேட்டாக ரிலீஸானாலும்சிவாவுக்கு வெற்றியை கொடுத்தது. முக்கியமாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக களமிறங்கி அயலான் பந்தயம் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிவாவின் மவுசு மேலும் உயர்ந்தது.
அமரன்: மாவீரன், அயலான் என இரண்டு படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடித்ததை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் எஸ்கே. ராஜ்குமார் பெரியசாமி இயக்க; கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படமும் தனது கரியரில் மைல் கல்லாக இருக்கும் என்ற உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்குநர் என்பதால் கூடுதல் கவனத்தையும் படம் பெற்றுள்ளது.
உண்மை சம்பவம்: இந்தப் படமானது முன்னாள் இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக இராணுவ வீரர் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் சிவா. இந்தப் படத்தின்போதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி நடித்தும் முடித்திருக்கிறார். படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகிறது.
கொட்டுக்காளி: இதற்கிடையே சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் ஜொலித்துவருகிறார். அந்தவகையில் சூரியை வைத்து கொட்டுக்காளி படத்தை தயாரித்திருக்கும் சிவா; அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும்போது, "யாரையும் கண்டுபிடித்து; இவருக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்; நான்தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கிவிட்டார்கள். அப்படிப்பட்ட ஆள் எல்லாம் நான் இல்லை. இதோ எனது நண்பர் இவர்தான் என்று ஒரு அறிமுகம் செய்வோம் இல்லையா. அப்படித்தான் இதனை நான் செய்கிறேன். நீங்கள் கொடுத்த நடிகர் என்ற இடத்திலிருந்து அதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார்.
சேகுவேரா பதிலடி: அவரது இந்தப் பேச்சு தனுஷை குறிப்பதாக பலர் பேசினார்கள். இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் சேகுவேரா பேசுகையில், "தனுஷ்தான் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்காக தினமும் காலையில் சிவகார்த்திகேயன் தனுஷுக்கு ஃபோன் செய்து, காலை வணக்கம் சார். நீங்கள்தான் எனக்கு சோறு போட்டீர்கள், மோர் ஊத்துனீர்கள். நன்றி என்று சொல்லிக்கொண்டேவா இருக்க முடியும். சிவகார்த்திகேயன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். அப்படித்தான் டி.இமான் விவகாரத்திலும் நடந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











