Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சரியான நேரத்தில் மீண்டும் நடிக்க வருவார் ஜோதிகா: சூர்யா
ஜோதிகா சரியான நேரத்தில் மீண்டும் நடிப்பைத் தொடர்வார் என்று அவரது கணவரும், நடிகருமான சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகை ஜோதிகா குடும்பம், குழந்தை என்று ஆன பிறகு நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த மலையாள படமான சீதா கல்யாணம் தான் அவர் கடைசியாக நடித்த படம். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அவருக்கு மீண்டும் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளதாக அவரது கணவர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து சூர்யா கூறுகையில்,
மீண்டும் படங்களில் நடிக்க ஜோதிகா ஆசைப்படுகிறார். நான் அவரை நடிக்க வேண்டாம் என்று ஒருபோதும் கூறியதில்லை. விளம்பரங்களில் நடித்தால் ஓரிரு நாள் தான் ஷூட்டிங் நடக்கும். ஆனால் படங்களில் நடித்தால் அவ்வளவு சீக்கிரம் ஷூட்டிங் முடியாது. அதனால் அவர் குழந்தைகளைப் பிரிந்திருக்க வேண்டி வரும். குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர் நடிக்காமல் உள்ளார். இது தான் நடிப்பைத் தொடர சரியான நேரம் என்று அவருக்கு தோன்றும்போது மீண்டும் நடிக்க வருவார் என்றார்.
சூர்யா, ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.