Don't Miss!
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாலச்சந்தர் நல்லாருக்கார்.. என்னைப் பார்த்தார்.. சிரித்தார்! - ரஜினி பேட்டி
சென்னை: இயக்குநர் கே பாலச்சந்தர் நலமுடன் இருப்பதாகவும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும் அவரை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
100 படங்களை இயக்கியவரும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவருமான கே பாஇயக்குநர் இன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதற்கிடையில் பாலச்சந்தர் உடல்நிலை குறித்து ரஜினிகாந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தார்.
ஐசியுவில் இருந்த பாலச்சந்தரை அவர் பார்த்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் வந்த ரஜினி, செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், "கேபி சாரை நான் பார்த்தேன். அவர் நல்லாருக்கார். என்னைப் பார்த்துச் சிரித்தார். அவருக்கு ஒன்றும் ஆகாது. அவர் விரைவில் குணமடைந்து வர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்," என்றார்.