Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாலச்சந்தர் நல்லாருக்கார்.. என்னைப் பார்த்தார்.. சிரித்தார்! - ரஜினி பேட்டி
சென்னை: இயக்குநர் கே பாலச்சந்தர் நலமுடன் இருப்பதாகவும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும் அவரை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
100 படங்களை இயக்கியவரும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவருமான கே பாஇயக்குநர் இன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதற்கிடையில் பாலச்சந்தர் உடல்நிலை குறித்து ரஜினிகாந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தார்.
ஐசியுவில் இருந்த பாலச்சந்தரை அவர் பார்த்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் வந்த ரஜினி, செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், "கேபி சாரை நான் பார்த்தேன். அவர் நல்லாருக்கார். என்னைப் பார்த்துச் சிரித்தார். அவருக்கு ஒன்றும் ஆகாது. அவர் விரைவில் குணமடைந்து வர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்," என்றார்.