Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தசாவதாரம் கதை: கமலுக்கு உத்தரவு
தசாவதாரம் படத்தின் கதை தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில்குமார் என்ற உதவி இயக்குநர், கமல்ஹாசன் நடிக்கும் தசாவதாரம் படத்தின் கதை தன்னுடையது. அதை திருட்டுத்தனமாக எடுத்து தசாவதாரம் படத்தை எடுத்து வருகின்றனர் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி, செந்தில்குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார். இதையடுத்து செந்தில்குமார் பெஞ்ச் முன்பு மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
கடந்த மாதம் படத்தின் முழுக் கதையையும், யார் பெயரில் அந்தக் கதைக்கு காப்பிரைட் தரப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் கூறியிருந்த காலத்திற்குள் இவற்றை தயாரிப்பாளர் தரப்பு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் கமல்ஹாசன் சார்பில் வக்கீல் சஞ்சய் ராமசாமி ஆஜரானார். படத்தின் முழுக் கதையையும் மனுதாரர் கோருவது நியாயமற்றது என்று அவர் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், படத்தின் முழு திரைக்கதையையும் தாக்கல் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் கமல்ஹாசனுக்கு உத்தரவிட்டனர்.
இந்தக் கதையின் நகலை மனுதாரருக்கு (செந்தில்குமாருக்கு) தருவது குறித்து ஆகஸ்ட் 7ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!