Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆஸ்கரும், தர்மமும்- கமல் கவிஞர் புவியரசுவின் நூல்கள் வெளியீட்டு விழா கோவை சிஐடி கல்லூரியில் நடந்தது. அதில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற கமல் நூல்களை வெளிட்டுப் பேசுகையில்,எனக்கு புவியரசுவை 30 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவர் முதன்முதலில் என்னைச் சந்தித்த காலத்தில்நான் நல்ல நடிகன் என்றோ, சினிமாவை நேசிக்கிற ரசிகன் என்றோ யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.அப்போது என்னை அடையாளம் கொண்டு என்னை முதன்முதலாக நட்பு பாராட்டியவர் புவியரசு. கவிஞனைஅவன் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்.இந்த விழாவில் நான் பங்கேற்க புவியரசுடனான என் நட்பு மட்டும் காரணமல்ல. தமிழ் மீது நான் கொண்டுள்ளபற்றும் தான் காரணம்.காதலர்கள் தங்களுக்குள் தங்க மோதிரம், பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்வதை மாற்றி புத்தகங்களைபரிசளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். காதலிக்கு கவிதைப் புத்தகத்தை பரிசலிக்கலாம். அதை காதலி சும்மாவாவதுபடித்துக் கொண்டிருக்கலாம்.உங்களுக்குப் பிடித்ததை பற்றி படியுங்கள். எதையாவது படித்துத் தொலையுங்கள் என்று கூட சொல்வேன்.அப்போது தான் சந்தேகங்கள் வரும், கேள்விகள் கிளம்பும். புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாகத் தொடங்கவேண்டும்.கவிஞர்களின் உதவியோடு அமரகாவியம் என்ற படத்தை எடுக்க நானும் புவியரசும் திட்டமி"டடோம். ஆனால்,அது கிடப்பில் உள்ளது.ஆஸ்கர் நாயகனே என்று என்னை ரசிகர்கள் அழைக்கிறார்க். ஆஸ்கர் பற்றி பேசிப் பேசி எனக்கு அலுத்துப்போய்விட்டது. அது ஹாலிவுட் படங்களுக்குத் தரப்படும் விருதாகிவிட்டது. தமிழ்ப் படம் மூலம் நடித்துஆஸ்கரைப் பெறுவது என்பது, தர்மம் (பிச்சை) பெறுவதற்குச் சமம்.ஹாலிவுட் ஹீரோக்கள் தமிழில் நடித்து விருது பெறட்டும். வேண்டுமானால் அந்த விருதுக்கு ஹாசன் விருது எனப்பெயரிடலாம். அமெரிக்க நடிகர்களுடன் அந் நாட்டுப் படங்களில் நடித்து ஆஸ்கர் வாங்குவதில் தான்உண்மையான பெருமை இருக்கிறது என்றார் கமல்.
கவிஞர் புவியரசுவின் நூல்கள் வெளியீட்டு விழா கோவை சிஐடி கல்லூரியில் நடந்தது. அதில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற கமல் நூல்களை வெளிட்டுப் பேசுகையில்,
எனக்கு புவியரசுவை 30 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவர் முதன்முதலில் என்னைச் சந்தித்த காலத்தில்நான் நல்ல நடிகன் என்றோ, சினிமாவை நேசிக்கிற ரசிகன் என்றோ யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அப்போது என்னை அடையாளம் கொண்டு என்னை முதன்முதலாக நட்பு பாராட்டியவர் புவியரசு. கவிஞனைஅவன் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்.
இந்த விழாவில் நான் பங்கேற்க புவியரசுடனான என் நட்பு மட்டும் காரணமல்ல. தமிழ் மீது நான் கொண்டுள்ளபற்றும் தான் காரணம்.
காதலர்கள் தங்களுக்குள் தங்க மோதிரம், பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்வதை மாற்றி புத்தகங்களைபரிசளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். காதலிக்கு கவிதைப் புத்தகத்தை பரிசலிக்கலாம். அதை காதலி சும்மாவாவதுபடித்துக் கொண்டிருக்கலாம்.
உங்களுக்குப் பிடித்ததை பற்றி படியுங்கள். எதையாவது படித்துத் தொலையுங்கள் என்று கூட சொல்வேன்.அப்போது தான் சந்தேகங்கள் வரும், கேள்விகள் கிளம்பும். புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாகத் தொடங்கவேண்டும்.
கவிஞர்களின் உதவியோடு அமரகாவியம் என்ற படத்தை எடுக்க நானும் புவியரசும் திட்டமி"டடோம். ஆனால்,அது கிடப்பில் உள்ளது.
ஆஸ்கர் நாயகனே என்று என்னை ரசிகர்கள் அழைக்கிறார்க். ஆஸ்கர் பற்றி பேசிப் பேசி எனக்கு அலுத்துப்போய்விட்டது. அது ஹாலிவுட் படங்களுக்குத் தரப்படும் விருதாகிவிட்டது. தமிழ்ப் படம் மூலம் நடித்துஆஸ்கரைப் பெறுவது என்பது, தர்மம் (பிச்சை) பெறுவதற்குச் சமம்.
ஹாலிவுட் ஹீரோக்கள் தமிழில் நடித்து விருது பெறட்டும். வேண்டுமானால் அந்த விருதுக்கு ஹாசன் விருது எனப்பெயரிடலாம். அமெரிக்க நடிகர்களுடன் அந் நாட்டுப் படங்களில் நடித்து ஆஸ்கர் வாங்குவதில் தான்உண்மையான பெருமை இருக்கிறது என்றார் கமல்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!