Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஹீரோ .. ஹீரோ ..
நடிகர் கமல்ஹாசன் தனது 49வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடினார். அப்போது ஏழை,எளிய மக்களுக்கு கைத்தறி சேலைகள், வேட்டிகளை கமல்ஹாசன் வழங்கினார்.
ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் பிறந்த நாள் விழா நடந்தது. நடிகர்கள் நாகேஷ், சத்யராஜ்,நெப்போலியன் உள்ளிட்டவர்கள் நேரில் வந்து கமல்ஹாசனை வாழ்த்தினர்.
ஏழை, எளிய மக்களுக்கு கைத்தறி சேலைகள், வேட்டிகளை வழங்கினார் கமல். பின்னர் ரசிகர்கள் மத்தியில் அவர்பேசுகையில்,
எனது மக்கள் சேவை தொடரும். எந்தவித அரசியல் சார்பும், சாயம் இன்றி இந்த சேவை நீடிக்கும்.
எனக்குப் பின்னும் இந்த இயக்கம், மக்கள் இயக்கமாக நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்தபாக்கியத்தை எனக்குக் கொடுத்துள்ள ரசிகர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
முன்னதாக தன்னைச் சந்திக்க வரும் ரசிகர்கள் மாலையோ, சால்வையோ கொண்டு வரக் கூடாது எனவும்கைத்தறியால் ஆன சேலைகளையும் வேட்டிகளையும் வாங்கி வர வேண்டும் எனவும் கமல் கட்டளையிட்டிருந்தார்.
இதனால் பெரும் அளவிலான வேட்டி, சேலைகள் குவிந்தன. அவற்றை முதியோர் மற்றும் ஏழைகளுக்கு கமல்வழங்கினார். மேலும் குவியும் உடைகளை முதியோர் இல்லங்களுக்கு அளிக்க அவர் முடிவு செய்துள்ளார்.
மாலையில் காமராஜர் அரங்கில், பல்வேறு விருதுகளை வழங்கியும், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகளை வழங்கியும் கமல்ஹாசன் பேசுகிறார்.
கமலுக்கு வாழ்த்துத் தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில், கொட்டும் மழையில் நீண்ட நேரம்காத்திருந்தனர்.
காலையில் ரஜினியிடம் இருந்து கமலுக்கு முதல் டெலிபோன் வாழ்த்து கிடைத்தது.