Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்!
திடீர் சுகவீனம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் கமல்ஹாஸன், நேற்று இரவு வீடு திரும்பினார்.
நடிகர் கமல்ஹாசன் நேற்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் பிரிவு டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு நரம்பு கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் அவரது பிஆர்ஓ தரப்பில், கமலுக்கு உணவுக் கோளாறுதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
நேற்று மாலை வரை கமலுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, நேற்று இரவு அவர் உடல் நலத்துடன் வீடு திரும்பியதாக தகவல் வந்துள்ளது.
கமல்ஹாசன் தொடர்ந்து சில நாட்கள் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதால் அவருக்கு நரம்புத் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வீட்டுக்கு திரும்பிய கமல், அங்கிருந்து ‘உத்தம வில்லன்' படத்திற்காக டப்பிங் பேச சென்றுவிட்டாராம்.