Don't Miss!
- Sports ஐபிஎல் 2024 - சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பு பாதிப்பு.. புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்!
திடீர் சுகவீனம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் கமல்ஹாஸன், நேற்று இரவு வீடு திரும்பினார்.
நடிகர் கமல்ஹாசன் நேற்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் பிரிவு டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு நரம்பு கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் அவரது பிஆர்ஓ தரப்பில், கமலுக்கு உணவுக் கோளாறுதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
நேற்று மாலை வரை கமலுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, நேற்று இரவு அவர் உடல் நலத்துடன் வீடு திரும்பியதாக தகவல் வந்துள்ளது.
கமல்ஹாசன் தொடர்ந்து சில நாட்கள் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதால் அவருக்கு நரம்புத் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வீட்டுக்கு திரும்பிய கமல், அங்கிருந்து ‘உத்தம வில்லன்' படத்திற்காக டப்பிங் பேச சென்றுவிட்டாராம்.