Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திரைப்படம் எடுப்பதில் எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை- கமல்ஹாசன்
சென்னை: திரைப்படம் எடுப்பதில் எனக்கு முழுமையான சுதந்திரம் இதுவரை இந்தியாவில் கிடைக்கவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
கமல்ஹாசன் சமீபத்தில் பிரபலமான ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் அவரது திரைப்படங்கள் குறித்து கேள்விகள் எழுந்தது.
திரைப்படம் பற்றி கமல் கூறும்போது "உலகின் பிற நாடுகளை ஒப்பிடும் போது எந்த ஒரு இந்திய திரைப்பட படைப்பாளிக்கும் முழுமையான பேச்சு சுதந்திரம் இல்லை.
இதுதான் யதார்த்த உண்மை.எனக்கும் படம் எடுப்பதில் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. இதை ஒரு புகாராகவே நான் வைக்கிறேன்.படமெடுப்பதில் நான் இன்னும் முழு சுதந்திரத்தை பெறவில்லை.
சுதந்திரம் என்பது மாறாதது மற்றும் நிலையானது. சுதந்திரம் வரம்புடன் இருக்க வேண்டும். என்றாலும் அது நமது உடல் போன்றது. அதை நாம்தான் ஊட்டி வளர்த்து காப்பாற்ற வேண்டும்.
மேலும் நமது சுதந்திரம் நமக்கு அவசியமானது. அது நமக்கு வழங்கப்பட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். கமல்ஹாசனின் இந்த பேச்சு பெருவாரியான ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.