Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
திரைப்படம் எடுப்பதில் எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை- கமல்ஹாசன்
சென்னை: திரைப்படம் எடுப்பதில் எனக்கு முழுமையான சுதந்திரம் இதுவரை இந்தியாவில் கிடைக்கவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
கமல்ஹாசன் சமீபத்தில் பிரபலமான ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் அவரது திரைப்படங்கள் குறித்து கேள்விகள் எழுந்தது.
திரைப்படம் பற்றி கமல் கூறும்போது "உலகின் பிற நாடுகளை ஒப்பிடும் போது எந்த ஒரு இந்திய திரைப்பட படைப்பாளிக்கும் முழுமையான பேச்சு சுதந்திரம் இல்லை.
இதுதான் யதார்த்த உண்மை.எனக்கும் படம் எடுப்பதில் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. இதை ஒரு புகாராகவே நான் வைக்கிறேன்.படமெடுப்பதில் நான் இன்னும் முழு சுதந்திரத்தை பெறவில்லை.
சுதந்திரம் என்பது மாறாதது மற்றும் நிலையானது. சுதந்திரம் வரம்புடன் இருக்க வேண்டும். என்றாலும் அது நமது உடல் போன்றது. அதை நாம்தான் ஊட்டி வளர்த்து காப்பாற்ற வேண்டும்.
மேலும் நமது சுதந்திரம் நமக்கு அவசியமானது. அது நமக்கு வழங்கப்பட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். கமல்ஹாசனின் இந்த பேச்சு பெருவாரியான ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.