Don't Miss!
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பீகே ரீமேக்கில் நானா...?: கமல் விளக்கம்
சென்னை: 'பீகே' பட ரீமேக்கில் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், சஞ்சய் தத், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பீகே'. வசூலில் சாதனை புரிந்த இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
பீகே படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க இருப்பதாகவும், பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இப்படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
சொந்தத் தயாரிப்பு...
"இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர்களோடு முதற்கட்ட பேச்சு வார்த்தை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. என்னுடைய அடுத்தப் படம் எனது சொந்த தயாரிப்பில்தான் இருக்கும்.
மொரிஷியஸில் தங்கி...
அதற்காகதான் இப்போது மொரிஷியஸில் தங்கி திட்டமிடும் வேலைகளை செய்துவருகிறேன். யாரோ முடிவாக 'பீகே' ரீமேக் குறித்து கொளுத்திப் போட்டுள்ளனர்.
எனது கோரிக்கைகள்...
எனது கோரிக்கைகளுக்கு ஒத்துவந்தால் மட்டுமே அந்தப் படத்தின் ரீமேக்கில் நடிப்பது குறித்து யோசிக்க முடியும். இல்லையென்றால் வேறு யாரேனும் அதில் நடிப்பார்கள்.
சுவாரசியமான படம் தான்...
ஆனால் நிச்சயமாக 'பீகே' மிகவும் நல்ல சுவாரசியமான படம். யார் நடித்தாலும் வெற்றி நிச்சயம். அந்தப் படத்தில் நடிக்க நிறைய நடிகர் போட்டிபோட்டு முன்வருவார்கள்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.