முதல் உலகப் போர் ஹீரோக்களுக்கு கமல் மரியாதை
சென்னை: முதல் உலகப் போரில் வீர மரணம் அடைத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கமல் ஹாஸன் மரக் கன்று நட்டார்.
முதல் உலகப் போர் முடிந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் போரில் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவும் ஈடுபட்டு, ஜப்பான் தலைமையிலான அச்சு நாட்டுப் படைகளை எதிர்த்துப் போராடியது.

74187 வீரர்கள்
இந்தப் போரில் மொத்தம் பிரிட்டிஷ் இந்தியப் படையைச் சேர்ந்த 74187 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களின் மரணத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில்தான் டெல்லியில் இந்தியா கேட் அமைக்கப்பட்டது.

மரியாதை
இப்போது முதல் உலகப் போரின் நூறாம் ஆண்டில், அந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்தியப் பிரபலங்கள் பலரும் மரக்கன்றுகள் நட்டனர்.

கமல் ஹாஸன்
வாழும் நினைவாலயம் அமைப்புடன் இணைந்து நடிகர் கமல் ஹாஸன் நேற்று ஒரு மரக் கன்று நட்டு அஞ்சலி செலுத்தினார்.

சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கோத்ரெஜ் தலைவர் ஆடி கோத்ரெஜ், சன்மார்க் தலைவர் ரெம்மி ரேஞ்சர், நடிகர்கள் விவேக், கபீர் பேடி ஆகியோரும் இந்த அமைப்புடன் இணைந்து மரக்கன்று நட்டார்கள்

ராய் லட்சுமி
நடிகைகள் ராய் லட்சுமி, அபிதா, தீபிகா சிங், இமான் அண்ணாச்சி ஆகியோரும் வாழும் நினைவாலயம் அமைப்புடன் இணைந்து முதல் உலகப் போர் ஹீரோக்களுக்காக மரக்கன்று நட்டார்கள்.


Click it and Unblock the Notifications











