Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தூங்கா வனம்... புதுப் படத்தை அறிவித்தார் கமல்.. அவரே தயாரிக்கிறார்!
சென்னை:‘உத்தம வில்லன்' படத்தை அடுத்து, கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘தூங்காவனம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தை அவருடைய சொந்தப்பட நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிக்கிறது.
கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘உத்தம வில்லன்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கினார்.
பாபநாசம்
இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த ‘பாபநாசம்' திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக கவுதமி நடித்திருக்கிறார். படத்தில் 2 குழந்தைகளுக்கு தந்தையாக கமல்ஹாசன் நடிக்கிறார். இந்த படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்' என்ற மலையாளப்படத்தை தழுவிய கதை ஆகும்.
புதிய படம்
இதையடுத்து அவர் நடிப்பில் உருவான ‘விஸ்வரூபம்-2' திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்தநிலையில் கமல்ஹாசன் தான் நடிக்க இருக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவரே வெளியிட்டார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நாங்கள் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். நான் நடிக்கும் அடுத்த படத்தை ‘ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
‘தூங்காவனம்’
எனது புதிய படத்துக்காக பல தலைப்புகளை யோசித்தோம். இறுதியில் இந்த படத்துக்கு ‘தூங்காவனம்' என்று பெயரை வைக்க முடிவு எடுத்தேன். இது விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட திகில் படம். எனது உதவியாளராக பணிபுரிந்த ராஜேஷ், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார்," என்று கூறியுள்ளார்.