Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இஃபி: 7 படங்களைத் திரையிட வேண்டும் என நான் கோரவில்லை - கமல்
பனாஜியில் நவம்பர் 23ம் தேதி சர்வதேச இந்திய திரைப்பட விழா தொடங்குகிறது. இதில் திரையுலகில் 50 ஆண்டுகளை முடித்துள்ள கமல்ஹாசன், ஆஷா பரேக், ஷர்மிளா தாகூர், செளமித்ரா சாட்டர்ஜி ஆகியோரைக் கெளரவிக்கும் வகையில் இவர்கள் நடித்த படங்கள் தலா மூன்றை தனியாக திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது இந்தப் பட்டியலில் கமல்ஹாசன் இடம் பெறவில்லை. கமல்ஹாசன் தரப்பில் 7 படங்களைத் திரையிட வேண்டும் என கோரியதாகவும், ஆனால் அப்படி செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், விழாவுக்கான இயக்குநர் எஸ்.எம். கான் கூறியிருந்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கமல்ஹாசன் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் அப்படி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எனது நண்பர்கள்தான், 3 படங்களில் என்னை அடக்கி விட முடியாதே, 7 படங்களாவது இருக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
எனது நண்பர்கள்தான் அதை விரும்பினார்கள். என்னிடம் சிலர் பேசுகையில், ஏழு படங்களாக இருக்கட்டும் என வலியுறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டனர். டெல்லியில் உள்ள எனது நண்பர்கள், நலம் விரும்பிகளின் ஆசை இது.
மேலும் இந்த ஏழு படங்களையும் டெல்லி நிகழ்ச்சியில் தனியாக திரையிட வேண்டும் என்பதும் அவர்களின் விருப்பம் என்றார் கமல்.
டெல்லியில் பிரத்யேகமாக கமல்ஹாசன் குறித்த திறனாயவு அடுத்த ஆண்டு பி்ப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாக எஸ்.எம்.கான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.