Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இஃபி: 7 படங்களைத் திரையிட வேண்டும் என நான் கோரவில்லை - கமல்
பனாஜியில் நவம்பர் 23ம் தேதி சர்வதேச இந்திய திரைப்பட விழா தொடங்குகிறது. இதில் திரையுலகில் 50 ஆண்டுகளை முடித்துள்ள கமல்ஹாசன், ஆஷா பரேக், ஷர்மிளா தாகூர், செளமித்ரா சாட்டர்ஜி ஆகியோரைக் கெளரவிக்கும் வகையில் இவர்கள் நடித்த படங்கள் தலா மூன்றை தனியாக திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது இந்தப் பட்டியலில் கமல்ஹாசன் இடம் பெறவில்லை. கமல்ஹாசன் தரப்பில் 7 படங்களைத் திரையிட வேண்டும் என கோரியதாகவும், ஆனால் அப்படி செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், விழாவுக்கான இயக்குநர் எஸ்.எம். கான் கூறியிருந்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கமல்ஹாசன் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் அப்படி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எனது நண்பர்கள்தான், 3 படங்களில் என்னை அடக்கி விட முடியாதே, 7 படங்களாவது இருக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
எனது நண்பர்கள்தான் அதை விரும்பினார்கள். என்னிடம் சிலர் பேசுகையில், ஏழு படங்களாக இருக்கட்டும் என வலியுறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டனர். டெல்லியில் உள்ள எனது நண்பர்கள், நலம் விரும்பிகளின் ஆசை இது.
மேலும் இந்த ஏழு படங்களையும் டெல்லி நிகழ்ச்சியில் தனியாக திரையிட வேண்டும் என்பதும் அவர்களின் விருப்பம் என்றார் கமல்.
டெல்லியில் பிரத்யேகமாக கமல்ஹாசன் குறித்த திறனாயவு அடுத்த ஆண்டு பி்ப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாக எஸ்.எம்.கான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.