Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிவாஜிக்கு பெரிய ரசிகன் யார்?-கமல்ஹாஸன்
சென்னையில் நேற்று ஒய்ஜி மகேந்திரனுக்கு நடந்த பொன்வி்ழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:
"வைரமுத்துவும், நானும் சகோதரர்கள். நாத்திகத்தில் மட்டுமல்ல, பல விஷயங்களில்.
கலைஞரும், நடிகர் திலகமும் எந்த அளவுக்கு நட்புடன் பழகினார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்தவன், நான். அதை என் பேரன்-பேத்திகளுக்கு கூட பெருமையாக சொல்வேன்.
சமீபத்தில் நடந்த விழாவில், நடிகர் திலகம் சிவாஜி மூச்சுவிடாமல் பேசிய வசனத்தை எழுதியது நாம்தான் என்ற எண்ணம் கூட இல்லாமல், அவர் ஐந்து நிமிடங்கள் மூச்சுவிடாமல் ஒரே ஷாட்டில் பேசி நடித்ததை எண்ணி, கலைஞர் கண்கலங்கினார். அதைப் பார்த்து எனக்கும் கண்ணீர் வந்தது.
கலைஞர் இப்போதும் வசனம் எழுதுவது எனக்கு ஆச்சரியம் அல்ல. அவர் எழுதாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
ஒய்.ஜி.மகேந்திரனுக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை வரும். நடிகர் திலகத்துக்கு நான் பெரிய ரசிகரா, அவர் பெரிய ரசிகரா? என்பதில்தான் எங்களுக்கு சண்டை வரும். முடிவில், நீதான் பெரிய ரசிகன் என்று விட்டுக்கொடுத்து விடுவேன். அது நட்புக்காக...,'' என்றார்.