Don't Miss!
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிவாஜிக்கு பெரிய ரசிகன் யார்?-கமல்ஹாஸன்
சென்னையில் நேற்று ஒய்ஜி மகேந்திரனுக்கு நடந்த பொன்வி்ழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:
"வைரமுத்துவும், நானும் சகோதரர்கள். நாத்திகத்தில் மட்டுமல்ல, பல விஷயங்களில்.
கலைஞரும், நடிகர் திலகமும் எந்த அளவுக்கு நட்புடன் பழகினார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்தவன், நான். அதை என் பேரன்-பேத்திகளுக்கு கூட பெருமையாக சொல்வேன்.
சமீபத்தில் நடந்த விழாவில், நடிகர் திலகம் சிவாஜி மூச்சுவிடாமல் பேசிய வசனத்தை எழுதியது நாம்தான் என்ற எண்ணம் கூட இல்லாமல், அவர் ஐந்து நிமிடங்கள் மூச்சுவிடாமல் ஒரே ஷாட்டில் பேசி நடித்ததை எண்ணி, கலைஞர் கண்கலங்கினார். அதைப் பார்த்து எனக்கும் கண்ணீர் வந்தது.
கலைஞர் இப்போதும் வசனம் எழுதுவது எனக்கு ஆச்சரியம் அல்ல. அவர் எழுதாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
ஒய்.ஜி.மகேந்திரனுக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை வரும். நடிகர் திலகத்துக்கு நான் பெரிய ரசிகரா, அவர் பெரிய ரசிகரா? என்பதில்தான் எங்களுக்கு சண்டை வரும். முடிவில், நீதான் பெரிய ரசிகன் என்று விட்டுக்கொடுத்து விடுவேன். அது நட்புக்காக...,'' என்றார்.