Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- News சிரித்த முகத்துடன்.. "நெருப்பு குழிக்குள்" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் "அஸ்தமனமான" பெண்.. ஐயோ
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிவாஜியின் மடியில், எம்.ஜி.ஆரின் தோளில் வளர்ந்த நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா?: கமல்
சென்னை: சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்த தான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா என்று சினிமா நூற்றாண்டு விழாவில் கமல் ஹாஸன் தெரிவித்தார்.
சினிமா நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவங்கி வைத்தார். விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாஸனுக்கு சிறப்பு விருதை ஜெயலலிதா வழங்கினார்.
விழாவில் பேசிய கமல் கூறுகையில்,
நான் சினிமா துறையில் 50 ஆண்டுகளாக உள்ளேன். இருப்பினும் நான் இன்னும் சின்ன குழந்தை தான். நான் குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் வெற்றி பெறாமல் இருக்க முடியுமா?. சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் உள்ளனர். ஒருவர் சிவாஜி கணேசன் மற்றொருவர் கே. பாலசந்தர்.
இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் என்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறை நடிகர், நடிகைகள் எங்களை விட பெரிய அளவில் வளர வேண்டும் என்றார்.