Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்- திரிஷாவுக்கு ஆதரவாக பதிவிட்ட கமல்
கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம் என்று திரிஷாவுக்கு ஆதரவாக கமலஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகை திரிஷா அமெரிக்க விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் விளம்பர தூதராக உள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா தான் காரணம் என்பதால் நடிகை திரிஷாவை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்படி தரக்குறைவாக பேசுபவர்கள் தமிழர்கள் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும் என்று திரிஷா பதில் அளித்திருந்தார்.
இதனையடுத்து நெட்டிசன்கள் டுவிட்டரில் வறுத்து எடுத்து வருகின்றனர். திரிஷாவை டுவிட்டரில் நெட்டிசன்கள் கருத்துக்களால் வறுத்து எடுப்பதைப் பார்த்து திரை உலக பிரபலங்கள் பலர் திரிஷாவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.
கமல் ஆதரவு
ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணியையும் தடை செய்ய வேண்டும் என்று காளைகள் கொல்லப்படுவது பற்றி கருத்து சொன்ன கமலஹாசன், பாவம் அறியாத பெண் தெரியாமல் செய்து விட்டார். அவர் அளவுக்கு நீங்கள் இறங்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.
வாழ வழி செய்வோம்
கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். எனது ஆதரவு எப்போதும் நாகரீகமாக உள்ளவர்களுக்கு மட்டுமே என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
|
டிவி தொகுப்பாளின் பாவனா
திரிஷாவிற்கு ஆதரவாக விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். டுவிட்டரில் இது போன்று பதிவிடுபவர்கள் கோழைகள். தங்களை யார் என்று வெளிக்காட்டி கொள்ளாமல் மறைமுக அடையாளங்கள் மூலம் தாக்குவார்கள். இதை பெரிதுபடுத்தாமல் நீங்கள் உறுதியாக இருங்கள் திரிஷா என்று நம்பிக்கை அளித்துள்ளார்.
|
தமிழன் என்பதில் பெருமை
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் அதே நேரத்தில் இதுபோன்று அடுத்தவர்களை காயப்படுத்தும் கருத்துக்களை பதிவிடுவதற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன் என்றும் பாவனா குறிப்பிட்டுள்ளார்.
|
ராதிகா பதிவு
திரிஷாவிற்கு ஆதரவாக ராதிகா, சின்மயி ஆகியோரும் கருத்து கூறியுள்ளனர். இதற்கும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உடனே ராதிகா, நானும் சரத்குமாரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்களே என்றும் 2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக அவர் போராட்டம் நடத்தியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.