Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நமக்குள் ஒற்றுமை வேண்டும்.... நல்ல முடிவுகளை விரைவில் எடுங்கள் - கமல்
நல்ல முடிவுகளை விரைவில் எடுங்கள். நம்முடன் வர மறுப்பார்களுக்கும் அழைப்பு விடுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
கமல் நேரில் வராவிட்டாலும் பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களிடையே ஸ்கைப் தொழில்நுட்பம் மூலமாக திரையில் தோன்றி நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
அப்போது அவர், நமது இடத்தில் பொதுக்குழு நடத்த வேண்டும் என்று ஆசைபட்டேன். அதை நடத்த வைத்தவர்களுக்கு நன்றி. நமக்குள் ஒற்றுமை வேண்டும். என்னை விட வயதில் இளையவர்களுக்கு நல்ல நட்பும், நேசமும் இருக்கிறது. அதற்காக தான் இளைஞர்கள் எல்லாம் ஒன்றுக் கூடி இப்பொதுக்குழுவை நடத்தி வருகிறார்கள். நாங்கள் எல்லாம் ஒதுங்கியிருந்து ரசித்து வருகிறோம்.
#UlagaNayagan #Chevalier @ikamalhaasan talks to Members through #Skype at #NadigarSangam #AGM @NadigarsangamP pic.twitter.com/6qWl8dF09J
— FridayCinemaa (@FridayCinemaa) November 27, 2016
நல்ல முடிவுகளை விரைவில் எடுங்கள். நம்முடன் வர மறுப்பார்களுக்கும் அழைப்பு விடுங்கள். பெரிய மனிதர்களாவது அப்படித்தான் என நான் நினைக்கிறேன் என்று கமல் தெரிவித்தார்.