கமலின் தசாவதாரம் சமீபத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு நிரந்தர தூக்கத்திற்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர் காஜா மைதீனின்தயாரிப்பில் கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் சூட்டிங் ஒரு வழியாகத் தொடங்கி விட்டது.ரோஜா கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசனை வைத்து, காக்க காக்க கெளதமின் இயக்கத்தில் உருவாகிறதுவேட்டையாடு விளையாடு.படத்தின் பூஜையைப் போட்டு பல மாதமாகியும் சூட்டிங் மட்டும் தொடங்காமல் இருந்தது. இந் நிலையில் தான் தற்கொலைக்குமுயன்றார் காஜா மைதீன்.இந்த தற்கொலை முயற்சிக்கு கமல்-கெளதம் இடையிலான மோதலும், சூட்டிங் தள்ளிப் போவதுமே காரணம் என்றுகோலிவுட்டில் பேசப்பட்டது. இதையடுத்து இருவரும் தங்களுக்குத் தரப்பட்ட அட்வான்ஸ் சம்பளமான சில கோடிகளைகாஜாவிடமே திருப்பித் தந்தனர். மேலும், காஜாவின் பிரச்சினைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை காஜா மூலமே விளக்க வைத்தனர். அத்தோடுபடப்பிடிப்பு முடிந்த பின் பணத்தை வாங்கிக் கொள்கிறோம். வேட்டையாடு விளையாடு படம் நிச்சயம் வெளியாகும் என்றும்உறுதியளித்தனர்.இந் நிலையில் உடல் நலம் தேறிவிட்ட காஜா தற்போது வேட்டையாடு விளையாடு படத்தைத் தொடங்கி விட்டார்.சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஹீரோயின் ஜோதிகா என்பதில் மாற்றமில்லை என்று கூறியுள்ளனர். இருப்பினும்அவரது கால்ஷீட் இப்போதைக்கு இல்லை என்பதால் முதலில் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் கெளதம்.முதல் கட்ட காட்சிகளை சென்னையில் படமாக்கி விட்டு பின்னர் அமெரிக்காவுக்கு சென்று படத்தின் பெரும்பாலான காட்சிகளைஅங்கு தான் சுடவிருக்கிறார்களாம். படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார் காஜா மைதீன்.இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்து கமல் நடிக்கப் போகும் படம் தசாவதாரம். அதை இயக்கப் போவதுகே.எஸ்.ரவிக்குமார். இந்தப் படத்தை தயாரிக்கப் போவது ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?இந்திய சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் செய்யாத சாதனையை இதில் கமல் செய்யப் போகிறார்.இந்தப் படத்தில் 10 வேடங்களில் நடிக்கப் போகிறாராம். அது தான் தசாவதாரமாம்.

By Staff

சமீபத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு நிரந்தர தூக்கத்திற்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர் காஜா மைதீனின்தயாரிப்பில் கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் சூட்டிங் ஒரு வழியாகத் தொடங்கி விட்டது.

ரோஜா கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசனை வைத்து, காக்க காக்க கெளதமின் இயக்கத்தில் உருவாகிறதுவேட்டையாடு விளையாடு.

படத்தின் பூஜையைப் போட்டு பல மாதமாகியும் சூட்டிங் மட்டும் தொடங்காமல் இருந்தது. இந் நிலையில் தான் தற்கொலைக்குமுயன்றார் காஜா மைதீன்.

இந்த தற்கொலை முயற்சிக்கு கமல்-கெளதம் இடையிலான மோதலும், சூட்டிங் தள்ளிப் போவதுமே காரணம் என்றுகோலிவுட்டில் பேசப்பட்டது. இதையடுத்து இருவரும் தங்களுக்குத் தரப்பட்ட அட்வான்ஸ் சம்பளமான சில கோடிகளைகாஜாவிடமே திருப்பித் தந்தனர்.


மேலும், காஜாவின் பிரச்சினைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை காஜா மூலமே விளக்க வைத்தனர். அத்தோடுபடப்பிடிப்பு முடிந்த பின் பணத்தை வாங்கிக் கொள்கிறோம். வேட்டையாடு விளையாடு படம் நிச்சயம் வெளியாகும் என்றும்உறுதியளித்தனர்.

இந் நிலையில் உடல் நலம் தேறிவிட்ட காஜா தற்போது வேட்டையாடு விளையாடு படத்தைத் தொடங்கி விட்டார்.

சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஹீரோயின் ஜோதிகா என்பதில் மாற்றமில்லை என்று கூறியுள்ளனர். இருப்பினும்அவரது கால்ஷீட் இப்போதைக்கு இல்லை என்பதால் முதலில் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் கெளதம்.

முதல் கட்ட காட்சிகளை சென்னையில் படமாக்கி விட்டு பின்னர் அமெரிக்காவுக்கு சென்று படத்தின் பெரும்பாலான காட்சிகளைஅங்கு தான் சுடவிருக்கிறார்களாம்.


படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார் காஜா மைதீன்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்து கமல் நடிக்கப் போகும் படம் தசாவதாரம். அதை இயக்கப் போவதுகே.எஸ்.ரவிக்குமார். இந்தப் படத்தை தயாரிக்கப் போவது ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

இந்திய சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் செய்யாத சாதனையை இதில் கமல் செய்யப் போகிறார்.

இந்தப் படத்தில் 10 வேடங்களில் நடிக்கப் போகிறாராம். அது தான் தசாவதாரமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X