Don't Miss!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சரீரத்தை விட்டவர் சாரீரமாக அன்னய்யா நம்முடன் உலவுகிறார்....எஸ்.பி.பி பற்றி கமல் உருக்கம்
சென்னை : மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் எஸ்பிபி உடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
Recommended Video
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்பிபி,க்கு கொரோனாவிற்கு பிந்தைய உடல் பாதிப்புக்கள் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி மருத்துவமனையிலேயே எஸ்பிபி.,யின் உயிர் பிரிந்தது .
டிரைலரே வராது மா...உளறிய வெங்கட் பிரபு...அதிர்ந்து போன ரசிகர்கள்
எஸ்பிபி.,யின் பழைய ஃபோட்டோக்கள், வீடியோக்கள், பாடல்கள், பேட்டிகள் ஆகியவற்றை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பிற மொழி பிரபலங்களும் எஸ்பிபி.,யின் நினைவுகளை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இதனை ரசிகர்களும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
ஃபோட்டோ பகிர்ந்த கமல்
இந்நிலையில் நடிகர் கமலஹாசன், ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிபி பற்றி உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார். எஸ்பிபி.,யுடன் எடுத்துக் கொண்ட பிளாக் அன்ட் ஒயிட் மற்றும் கலர் என இரண்டு பழைய ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ள கமல், தமிழில் தனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்.
சாரீரமாக நம்மோடு உலவுகிறார்
கமல் தனது பதிவில், " ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால் தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அளவில் டிரெண்டிங்
எஸ்பிபி.,யின் நினைவு தினத்தை முன்னிட்டு SPBalasubramanyam, SPB போன்ற ஹாஷ்டாகுகள் இந்திய அளவில் காலை முதலே டிரெண்டிங் ஆகி உள்ளன. கமலின் இந்த உருக்கமான பதிவையும் ஏராளமானோர் அதிகம் ரீட்வீட் செய்தும், லைக் செய்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
உருகும் ரசிகர்கள்
"இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" .. உங்கள் பாடல் என்றுமே எங்கள் காதுகளில் ரீங்காரம் ஆக ஒலித்துக்கொண்டே இருக்கும்.. உங்கள் குரலாக அவரும் ...அவரின் வெளிப்பாடாக நீங்கள் இருப்பதும் நாங்கள் அடைந்த பாக்கியம்... நன்றி தலைவா. தமிழ் இருக்கும் வரை இந்த தமிழனின் குரல் தரணியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும்.இசை உள்ளவரை SPB இருப்பார் ...தமிழ் மக்கள் இசை இருக்கும் வரை உங்களுக்கு அழிவே கிடையாது.... எங்கள் அனைவரின் வாழ்விலும் எப்போதும் நீங்கள் சங்கீத பூங்காற்று.... நம்முடன் தான் இருப்பார் எப்போதும்!!! என பலரும் கமெண்ட் பகுதியில் எஸ்பிபி.,க்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.