Don't Miss!
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால் போராட்டம்- சொல்கிறார் நடிகர் 'வேலூர்' ரவிச்சந்திரன்!
இதோ அதற்கு நல்ல உதாரணம் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் (இன்னொருவரும் உண்டு... அவர் 'தஞ்சை' ரமேஷ் அரவிந்த்!).
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டால் கன்னட திரையுலகம் போராட்டத்தில் குதிக்கும் என்று அவர் 'சவுண்ட்' விட்டுள்ளார்.
மைசூரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "கர்நாடகாவில் மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதன் விளைவாக இங்குள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் ஏரி, குளங்கள், அணைகள் நீர் இல்லாமல் வறண்டு வருகிறது. தற்போது கர்நாடக அணைகளில் இருப்பு உள்ள நீர் குடிப்பதற்கே போதுமானதாக இல்லை (!?).
இந்த நிலையில், தமிழகத்தில் காவிரியிலிருந்து தண்ணீர் கேட்பது சரியல்ல. ஒரு வேளை கர்நாடக அரசின் விளக்கத்தை ஏற்காமல் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், கன்னட திரையுலகம் திரண்டு வந்து போராட்டத்தில் குதிக்கும். கர்நாடக அரசும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது.
வருகிற நாட்களில் கர்நாடகாவில் மழை பெய்து, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பினால் மட்டுமே உபரி நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம். அதுவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது," என்றார்.
ரவிச்சந்திரன் பிறப்பால் ஒரு தமிழர். அவரது அப்பா பெயர் வீராசாமி. சொந்த ஊர் வேலூர்!!