twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இனி கமல் வழியில் ஒத்திகை!'- கரண்!

    By Chakra
    |

    Karan and Haripriya
    இனி கமல் சொன்னதைப் போல ஒத்திகைப் பார்த்தபிறகே நடிக்கப் போகிறேன், என்றார் நடிகர் கரண்.

    சினிமாவில் ஒத்திகை பார்த்த பிறகே நடிக்க வேண்டும் என்று மன்மதன் அம்பு படத் துவக்க விழாவில் நடிகர் கமல் தெரிவித்திருந்தார்.

    இதற்கு தமிழ் சினிமாவில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் கரணும் கமலின் கருத்தை ஆதரித்துள்ளதுடன், தனது அடுத்தபடமான தம்பி வெட்டோத்தி சுந்தரத்தின் படப்பிடிப்புக்கு முன் கட்டாயம் ஒத்திகை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதுபற்றி கரண் கூறியதாவது:

    கமல் சார் சொன்ன விஷயம் சரியாக பட்டதால் அதுபற்றி 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் இயக்குனர் வி.சி. வடிவுடையானிடம் சொன்னேன். ஒத்திகைப் பார்த்து நடிக்கலாம் என்று கூறினேன். அவரும் நல்ல விஷயம் என சம்மதித்தார்.

    'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை அதில் பங்கு பெறும் நடிகர்களை வைத்து மூன்று நாட்கள் ஒத்திகை செய்தோம். படம் உண்மை சம்பவkd கதை என்பதால் ஒத்திகைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

    எமோஷன் காட்சிகள் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன. இயக்குனரின் எண்ணம் சிறிதும் குறையாமல் மேலும் சிறப்படைய இந்த ஒத்திகை காரணமாக அமைந்துள்ளது" என்றார் கரண்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X