Don't Miss!
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'இனி கமல் வழியில் ஒத்திகை!'- கரண்!
சினிமாவில் ஒத்திகை பார்த்த பிறகே நடிக்க வேண்டும் என்று மன்மதன் அம்பு படத் துவக்க விழாவில் நடிகர் கமல் தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழ் சினிமாவில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் கரணும் கமலின் கருத்தை ஆதரித்துள்ளதுடன், தனது அடுத்தபடமான தம்பி வெட்டோத்தி சுந்தரத்தின் படப்பிடிப்புக்கு முன் கட்டாயம் ஒத்திகை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி கரண் கூறியதாவது:
கமல் சார் சொன்ன விஷயம் சரியாக பட்டதால் அதுபற்றி 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் இயக்குனர் வி.சி. வடிவுடையானிடம் சொன்னேன். ஒத்திகைப் பார்த்து நடிக்கலாம் என்று கூறினேன். அவரும் நல்ல விஷயம் என சம்மதித்தார்.
'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை அதில் பங்கு பெறும் நடிகர்களை வைத்து மூன்று நாட்கள் ஒத்திகை செய்தோம். படம் உண்மை சம்பவkd கதை என்பதால் ஒத்திகைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
எமோஷன் காட்சிகள் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன. இயக்குனரின் எண்ணம் சிறிதும் குறையாமல் மேலும் சிறப்படைய இந்த ஒத்திகை காரணமாக அமைந்துள்ளது" என்றார் கரண்.