Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹீரோ .. ஹீரோ ..
"நம்மவர்" படத்தில் வித்தியாசமான வில்லனாக கமலஹாசனால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கரண் சொந்தமாகப் படம் தயாரித்து, அதில் அவரேஹீரோவாகவும் நடிக்க முடிவெடுத்துள்ளார்.
மலையாளப் படவுலகில் ரகு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் கரண். "நம்மவர்" படத்தில் நடிக்க வருவதற்கு முன்மலையாளத்தில் ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். இதில் அந்த மாதிரி படங்களும் அடங்கும்.
"நம்மவர்" படத்திற்குப் பிறகு வித்தியாசமான ரோல்களில் நடிக்க ஆரம்பித்த கரண் குறுகிய காலத்தில் ஏராளமானதமிழ் படங்களில் நடித்தார்.
வில்லனாக ஆரம்பித்து, குணச்சித்திர ரோல்களிலும் அட்டகாசம் செய்த கரண், ஹீரோவாக மட்டும் இதுவரைநடிக்கவில்லை. இரண்டாவது ஹீரோ என்ற லெவலில்தான் இருந்து வந்தார்.
காரணம் அவரது உடல் கட்டு. தமிழ் சினிமாவில் காணாமல் போன பிரபு இல்லாத குறையை தனது உடல் மூலம்ஈடுகட்டி வருகிறார்.
இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். இரண்டு ஹீரோ, வில்லன் என எந்தப் பாத்திரத்திலும் நடிக்கமாட்டேன் என்று திடீர் முடிவு எடுத்தார் கரண். அதற்குப் பிறகு படங்களே இல்லை. வந்த வாய்ப்புகள் எல்லாமேஇரண்டாவது ஹீரோ கேரக்டர்தான். அவற்றை உதறித் தள்ளிவிட்டார்.
இதனால் இப்போது வீட்டில் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கரண் இப்போது தானே ஒரு படம் தயாரித்து அதில் ஹீரோவாக நடிக்க முடிவுசெய்துள்ளார்.
முதலில் தானே டைரக்ட் செய்யவும் நினைத்திருந்தார். ஆனால், நல்ல வேளையாக கடைசி நேரத்தில் அந்த விபரீதயோசனையை மாற்றிக் கொண்டு நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார் கரண்.
இந்த நியூஸைப் படிப்பவர்களுக்கு விட்டுடு தம்பி, அது வேணாம் தம்பி என்ற பாடல் நினைவுக்கு வந்தால்நாங்கள் பொறுப்பல்ல.