Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழில் ரீமேக்காகும் ‘அத்திரண்டிகி தாரேதி’ ... ஹீரோ கார்த்தியா?
லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற 'அத்திரண்டிகி தாரேதி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் கார்த்தி. இவர் அடுத்ததாக மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியில் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியது.
ஆனால் அதை கார்த்தி மறுத்துவிட்டார். இந்நிலையில் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற 'அத்திரண்டிகி தாரேதி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு தெலுங்கில், திரிவிக்ரம் இயக்கத்தில், பவன்கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் அத்திரண்டிகி தாரேதி'. நல்ல வசூலை வாரிக்குவித்த இந்த படம், ஆந்திர அரசின் 4 நந்தி விருதுகள் உள்பட பல விருதுகளையும் வென்றது.
இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில் நடிக்க கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் நாயகன் மற்றும் இயக்குநர் குறித்த தகவலை லைகா பட நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.