விரைவில் அப்பாவாகும் கார்த்தி!
சென்னை: நடிகர் கார்த்தியின் மனைவி ரஞ்சனி கர்ப்பமாக உள்ளார்.

பருத்தி வீரன் கார்த்தி
அமீரின் பருத்தி வீரனில் கைலி கட்டிக் கொண்டு சிறைக்குப் போகத் துடிக்கும் வாலிபனாக வந்த கார்த்தி அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பல விருதுகளைப் பெற்றார். இதன் மூலம் கோலிவுட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்
பருத்தி வீரனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

சிறுத்தையாய் சீறி சகுனியாய் மாறி
வெற்றிப் படமான சிறுத்தை இந்தியில் ரீமேக்கான போதும் அதைப் பார்த்தவர்கள் கார்த்தி மாதிரி இல்லப்பா என்று சொல்லும் அளவுக்கு நடித்திருந்தார்.

ரஞ்சனி சின்னசாமியுடன் திருமணம்
கார்த்திக்கும், அவருடன் நடித்த சிவத்த நடிகை ஒருவருக்கும் காதல் என்று கிசுகிசு வந்தது. இதையடுத்து அவரது அப்பா சிவக்குமார் ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி சின்னசாமியை தனது மகனுக்கு நிச்சயம் செய்தார்.

திருமணம், கர்ப்பம்
கடந்த 2011ம் ஆண்டு கார்த்தி ரஞ்சனியை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு கணவருடன் ஷூட்டிங் செல்லும் ரஞ்சனி தற்போது கர்ப்பமாக உள்ளார். விரைவில் அவர் குழந்தையைப் பெற்றெடுக்கவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











