Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சீர்திருத்தப் பள்ளி சிறுவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய கார்த்தி!
நடிகர் கார்த்திக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி சென்னை குன்றத்தூர் அருகே உள்ள லிட்டில் ட்ராப்ஸ் காப்பகத்திற்கு உணவுப்பொருட்களை வழங்கினார். 400 க்கும் மேற்பட்ட முதியோருக்கு உணவு வழங்கினார் கார்த்தி. இந்த காப்பகத்துக்கு ரூ 50 ஆயிரம் நிதியும் வழங்கினார்.
மதியம் புரசைவாக்கம் மற்றும் ராயபுரத்தில் இருக்கும் பெண்கள் - ஆண்கள் அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளுக்கு சென்ற கார்த்தி, மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பையா, பருத்திவீரன் வசனங்களைப் பேசிக்காட்டி மகிழ்வித்தார்.
இங்கிருந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவாக சிக்கன்-65 உடன் பிரியாணி விருந்து வழங்கினார். அத்துடன் அவர்களுக்கு தேவையான மேசை, நாற்காலி, பக்கெட் போன்ற பிற பொருட்களையும் வழங்கினார்.
சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சார்பாக அன்னதானம், கண்தானம், இரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல், நோட்டுப்புத்தகங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.
கார்த்தி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள், கார்த்தியுடனிருந்து உதவினர்.