Don't Miss!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குலு, மணாலியில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய கார்த்தி: உயிர் போய் வந்ததாக உருக்கம்
மணாலி: குலு, மணாலியில் பெரு வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்தி குலு மணாலியில் சிக்கியுள்ளார்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்துள்ள படம் தேவ். படத்தின் சில காட்சிகளை படமாக்க கார்த்தி மற்றும் 140 பேர் அடங்கிய குழு குலு, மணாலிக்கு கிளம்பிச் சென்றது.
இந்நிலையில் குலு, மணாலியில் கனமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மணாலி
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு ரூ. 1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்தாலும் கார்த்தி பத்திரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. மழை சாரலில் படப்பிடிப்பை நடத்த ஆசைப்பட்டு சென்ற இடத்தில் இப்படி சிக்கியுள்ளனர்.
|
படப்பிடிப்பு
நேற்று திடீர் என்று குலு, மணாலியில் நிலைமை மோசமாகிவிட்டது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் கார், பேருந்து என பல அடித்துச் செல்லப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு ஓடியதை என் கண்ணால் பார்த்தேன். இதை எல்லாம் பார்த்து ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என்கிறார் கார்த்தி.
கார்
நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 4 முதல் 5 மணிநேரம் காரிலேயே அமர்ந்திருந்தேன். பின்னர் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று அங்கு தங்கியுள்ளேன். படக்குழுவினரின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது. அவர்கள் எங்கே தங்கி, சாப்பிடுவார்கள் என்று தெரியவில்லை. 23 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பேரழிவால் பல பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.
கவலை
காரில் இருந்த நான் பத்திரமாக கிராமத்திற்கு வந்துவிட்டேன். படக்குழுவினர் மலை உச்சியில் சிக்கியுள்ளனர். பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உணவு கிடைக்காது. பாதைகளை சீர் செய்ய 28 மணிநேரம் ஆகும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர் லக்ஷ்மணனுக்கு ரூ. 1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கார்த்தி கூறியுள்ளார்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!