''என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது'': ஹரியிடம் கார்த்தி 'அடம்'

இயக்குனர் ஹரி சூர்யாவை வைத்து சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு கார்த்தியை வைத்து அருவா படத்தை இயக்குகிறார். கார்த்தி, ஹரி முதன் முதலாக சேர்ந்து பணியாற்றவிருக்கின்றனர். அருவா படத்தில் காமெடியனாக கார்த்தியுடன் சேர்ந்து ஏற்கனவே சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்துள்ள சந்தானத்தை நடிக்க வைக்க ஹரி முடிவு செய்திருந்தார்.
ஆனால் இது குறித்து அறிந்த கார்த்தி என் படத்தில் சந்தானம் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம். கார்த்திக்கு சந்தானம் மீது அப்படியென்ன கோபம் என்று கேட்டால், கோபமெல்லாம் இல்லையாம். அவர்கள் இருவரும் தொடர்ந்து ஒன்றாக நடிப்பதால் அனைத்து படங்களும் ரசிகர்களுக்கு ஒரே மாதிரியாகத் தெரியும் என்பதால் வேண்டாம் என்று கன்டிஷன் போட்டுள்ளாராம் கார்த்தி.
அதனால் சந்தானத்தை பரிசீலனையில் வைத்திருக்கிறாராம் ஹரி.
Comments


Click it and Unblock the Notifications