twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோலார் பேனல் மோசடி: மம்முட்டியிடமும் போலீஸ் விசாரணை?

    By Shankar
    |

    Kerala Police to interrogate Mammootty
    திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி தொடர்பாக முன்னணி மலையாள நடிகர் மம்முட்டியிடம் கேரள போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    சோலார் பேனல் மோசடியில் கைதான பிஜு ராதா கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதா நாயரிடம் பண ஆதாயம் பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் இடம் பெற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பட்டியலில் நடிகர் மம்முட்டியின் பெயரும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    பிஜு ராதாகிருஷ்ணன்- சரிதாநாயரின் நிறுவனம் கொச்சியில் நடத்திய ஒரு விழாவில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டார். அந்த விழாவில் மம்முட்டிக்கு விருது வழங்கியதோடு அவருக்கு ரூ.10 லட்சம் பணமும் கொடுத்ததாக பிஜு ராதாகிருஷ்ணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் நடிகர் மம்முட்டியிடம் இதுபற்றி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    ஆனால் இதனை நடிகர் மம்முட்டி மறுத்துள்ளார். கொச்சியில் நடந்த விழாவில் கலந்து கொண்டபோது, தனக்கு விருதும், ரூ.25 ஆயிரம் பணம் மட்டுமே தரப்பட்டதாகவும், அந்தப் பணத்தைக் கூட ஒரு அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டதாகவும் மம்முட்டி கூறியுள்ளார்.

    English summary
    The Kerala police is now decided to make interrogation with actor Mammootty on Solar Panel scam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X