ஸ்ரேயா படத்தின் மூலம் தமிழுக்கு வரும் கன்னட ஹீரோ பிரேம்
சென்னை: சந்திரா படம் மூலம் கன்னட ஹீரோவான பிரேம் குமார் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.
ரூபா ஐயர் இயக்கத்தில் கன்னட ஹீரோ பிரேம் குமார், ஸ்ரேயா நடித்து வரும் படம் சந்திரா. இளவரசியின் காதல் கதையான இந்த படம் கன்னடம் மற்றும் தமிழில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் மூலம் பிரேம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருக்கிறார்.
ஹீரோ கன்னடத்துகாரர் ஆனாலும் தமிழில் நன்றாக பேசுகிறார். சந்திரா படம் குறித்து அவர் அளித்த சிறப்பு பேட்டி..

குலு மணாலியில் என்ன செய்தோம்?
வழக்கமாக குலு மணாலியில் எல்லோரும் பாடல் காட்சிகளை படமாக்குவார்கள். ஆனால் சந்திரா படத்தில் சண்டை காட்சியை அங்கு படமாக்கினோம். -5 டிகிரி செல்சியஸ் குளிரில் சட்டையில்லாமல் சண்டை போட்டேன் தெரியுமா.

ஸ்ரேயாவுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி
ஸ்ரேயாவுக்கும், தனக்கும் படத்தில் செம கெமிஸ்ட்ரி உள்ளதாகவும் பிரேம் தெரிவித்தார்.

பிரேமை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
பக்கத்து வீட்டு பையன் போன்று இருக்கும் பிரேமை தமிழ ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது படம் ரிலீஸான பிறகு தான் தெரியும். ஏற்கனவே தமிழ் சினிமாவில் அர்ஜுன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்கள் பிரபலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











