ஹீரோ .. ஹீரோ ..
கமல்ஹாசனுடன் சேர்ந்து அன்பே சிவம் படத்தில் நடித்து வருகிறார் மாதவன்.
இந்தப் படத்திற்காக கமல்ஹாசன், மாதவனிடம் நேரடியாக பேசியபோது சில கண்டிஷன்களை போட்டாராம்மாதவன் (அன்பாகத் தான்!).
பஞ்சதந்திரத்தில் ஜெயராம் "வந்து சென்றதைப்" போல இல்லாமல் தனக்கு கொஞ்சமாவது முக்கியத்துவம்இருக்குமாறு கேரக்டரை அமைக்க வேண்டும் என்று கமலிடம் அன்புக் கட்டளையிட்டாராம் மாதவன்.
அதற்கு சிரித்துக் கொண்டே, நீ, வா பார்க்கலாம் என்று கூறினாராம் கமல்.
இப்போது கமலை விடவும் நன்றாகப் பேசப்படும் அளவுக்கு மாதவன் கேரக்டரை (அதாவது குருதிப்புனல்அர்ஜூன் கேரக்டர் போல) பில்ட் அப் செய்து விட்டார்களாம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் மாதவன்.
மின்னலே படத்துக்குப் பிறகு பிரேக் இல்லாமல் அவதிப்பட்டு வரும் மாதவனுக்கு, அன்பே சிவம் நல்வாழ்வைத்தரும் என்று கூறுகிறார்கள்.
கேட்டதை விட அதிகம் கொடுத்த கமலுக்கு நன்றியோ, நன்றிகளைக் கூறிக் கொண்டிருக்கிறாராம் மாதவன்.
ரன் படம் லேட்-பிக் அப் ஆகி இருப்பதால் மாதவனுக்கு சந்தோஷம் தான்.


Click it and Unblock the Notifications











