Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நானும், என் மகனும் மனமுடைந்துள்ளோம்: மாதவன் வருத்தம்
Recommended Video
சென்னை: தானும், தன் மகனும் மனமுடைந்துள்ளதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி ரன்வீர் சிங்கை வைத்து சிம்பா என்ற படத்தை எடுக்கிறார். கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்த படத்தில் ரன்வீர் ஜோடியாக நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா நடிக்கிறார்.
ரன்வீருக்கு வில்லனாக நடிக்குமாறு ரோஹித் மாதவனை கேட்டுள்ளார்.
காயம்
மாதவனுக்கு தோள் பட்டை பிரச்சனையால் கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் தேறி வருகிறார். இந்நிலையில் வந்த சிம்பா பட வாய்ப்பை அவரால் ஏற்க முடியவில்லை.
ரசிகர்
நானும், என் மகனும் ரோஹித் ஷெட்டி மற்றும் அவரின் படங்களின் ரசிகர்கள். அப்படி இருக்கும்போது காயம் காரணமாக அவர் படத்தில் நடிக்க முடியாமல் போனதால் நாங்கள் இருவரும் மனமுடைந்துள்ளோம். நான் தேறி வருகிறேன் ஆனால் இது பெரிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார் மாதவன்.
வில்லன்
மாதவன் நடிக்க முடியாமல் போனதால் அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக் பச்சனிடம் கேட்டுள்ளனர். அவரோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
கவுதம் மேனன்
கவுதம் மேனன் இயக்க உள்ள விண்ணைத் தாண்டி வருவாயா 2 படத்தில் மாதவன் தான் ஹீரோ. மாதவன், த்ரிஷா ஜோடியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.