twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பாவாகிறார் மாதவன் மாதவன் விரைவில் அப்பாவாகப் போகிறார்.ஒரு காலத்தில் இளைஞிகளின் (இப்போதும் சிலருக்கு) ஹார்ட்த்ரோப் ஆக இருந்த மாதவனுக்கு 5 வருடங்களுக்கு முன் திருமணமானது.காதலித்து வந்த பெண்ணையே அலைபாயுதே படத்தில் நடித்தபோது கைப்பிடித்தார் மாதவன்.இப்போது அவரது மனைவி 6 மாத கர்ப்பமாம். இதை மிக மகிழ்ச்சியோடு கூறி வருகிறார் மேடி.சமீப காலமாக மாதவனுக்கு பட வாய்ப்புக்களே இல்லை. இதனால் சுணங்கிவிடாமல், தான் விட்டுவிட்டு வந்த டிவி சீரியல்கள் பக்கமாகப்போய்விட்டார். இந்தி நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் மாதவன், தமிழில் விரைவில் மீண்டும் மணிரத்னத்தில் தயாரிப்பில் நடிக்கஇருக்கிறார்.தான் நடித்த படங்கள் அடுத்ததடுத்து தோல்வியடைந்தபோது சுதாரிக்காமல் விட்டுவிட்ட மாதவன், அடுத்து ஒரு தப்பு செய்தார்.ஒரு விரல் கிருஷ்ணாராவ் மாதிரி, தனது சம்பளத்தை ரூ. 1 கோடி என்று சொல்லிக் கொண்டு ரிஜிட் ஆக நின்றார். இதனால் அவரைத்தேடிப் போனவர்கள் கூட திரும்பி ஓடி வந்துவிட்டனர்.கடைசியாக ரொம்ப ஆவலாக எதிர்பார்த்த ஆய்த எழுத்து ஊத்திய பின்னாரவது சுதாரித்திருக்கலாம். ஆனாலும் சம்பளத்தை குறைக்கமறுத்தார்.இதனால் சுத்தமாக பட சான்ஸே இல்லாமல் போய்விட்டது. இதையடுத்துத் தான் மாதவனின் சம்பளத்தைக் குறைக்கும் முயற்சியில் அவரதுமேனேஜர் தீவிரமானார். அவரது கடும் முயற்சியால், சம்பளத்தைப் படிப்படியாகக் குறைத்துவிட்ட மாதவன், இப்போது ரூ. 1 கோடியில்இருந்து ரூ. 40 லட்சத்தில் வந்து நிற்கிறார்.இனிமேலாவது மாதவனுக்கு மீண்டும் நல்ல காலம் பிறந்தால் சரி.இன்னொரு சேதி தெரியுமோ.. இதே மேனேஜரைத் தான் சதாவும் தனது மேனேஜராக நியமித்திருக்கிறார்.ப்ரியசகி படப்பிடிப்பின்போது சதாவுக்கும் மாதவனுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பின் தொடர்ச்சியாம் இது.

    By Staff
    |

    மாதவன் விரைவில் அப்பாவாகப் போகிறார்.

    ஒரு காலத்தில் இளைஞிகளின் (இப்போதும் சிலருக்கு) ஹார்ட்த்ரோப் ஆக இருந்த மாதவனுக்கு 5 வருடங்களுக்கு முன் திருமணமானது.

    காதலித்து வந்த பெண்ணையே அலைபாயுதே படத்தில் நடித்தபோது கைப்பிடித்தார் மாதவன்.

    இப்போது அவரது மனைவி 6 மாத கர்ப்பமாம். இதை மிக மகிழ்ச்சியோடு கூறி வருகிறார் மேடி.

    சமீப காலமாக மாதவனுக்கு பட வாய்ப்புக்களே இல்லை. இதனால் சுணங்கிவிடாமல், தான் விட்டுவிட்டு வந்த டிவி சீரியல்கள் பக்கமாகப்போய்விட்டார். இந்தி நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் மாதவன், தமிழில் விரைவில் மீண்டும் மணிரத்னத்தில் தயாரிப்பில் நடிக்கஇருக்கிறார்.

    தான் நடித்த படங்கள் அடுத்ததடுத்து தோல்வியடைந்தபோது சுதாரிக்காமல் விட்டுவிட்ட மாதவன், அடுத்து ஒரு தப்பு செய்தார்.

    ஒரு விரல் கிருஷ்ணாராவ் மாதிரி, தனது சம்பளத்தை ரூ. 1 கோடி என்று சொல்லிக் கொண்டு ரிஜிட் ஆக நின்றார். இதனால் அவரைத்தேடிப் போனவர்கள் கூட திரும்பி ஓடி வந்துவிட்டனர்.

    கடைசியாக ரொம்ப ஆவலாக எதிர்பார்த்த ஆய்த எழுத்து ஊத்திய பின்னாரவது சுதாரித்திருக்கலாம். ஆனாலும் சம்பளத்தை குறைக்கமறுத்தார்.

    இதனால் சுத்தமாக பட சான்ஸே இல்லாமல் போய்விட்டது. இதையடுத்துத் தான் மாதவனின் சம்பளத்தைக் குறைக்கும் முயற்சியில் அவரதுமேனேஜர் தீவிரமானார். அவரது கடும் முயற்சியால், சம்பளத்தைப் படிப்படியாகக் குறைத்துவிட்ட மாதவன், இப்போது ரூ. 1 கோடியில்இருந்து ரூ. 40 லட்சத்தில் வந்து நிற்கிறார்.

    இனிமேலாவது மாதவனுக்கு மீண்டும் நல்ல காலம் பிறந்தால் சரி.

    இன்னொரு சேதி தெரியுமோ.. இதே மேனேஜரைத் தான் சதாவும் தனது மேனேஜராக நியமித்திருக்கிறார்.

    ப்ரியசகி படப்பிடிப்பின்போது சதாவுக்கும் மாதவனுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பின் தொடர்ச்சியாம் இது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X