Don't Miss!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- News விரல் நகத்தை வச்சே.. உங்களுக்குள் மறைந்து இருக்கும் கேரக்டரை கண்டுபிடிச்சிடலாம்.. ரெடியா?
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்தி திரையுலகம் எனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாதுன்னு சொன்ன மகேஷ் பாபு.. இத்தனை கோடி சம்பளமா?
சென்னை: இந்தி படங்களில் நடிக்க மாட்டேன் என சமீபத்தில் நடந்த விழாவில் நடிகர் மகேஷ் பாபு பேசி இருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் தனக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்த்து மற்றும் இங்கே உள்ள ரசிகர்கள் தன் மீது செலுத்தும் அன்புக்கு என்றுமே கடமைப் பட்டு நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும், பாலிவுட் சினிமாவால் தனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாது என மகேஷ் பாபு அதிரடியாக பேசிய நிலையில், அவர் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார் என்கிற தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
அப்பா வரல!! அஜித் சார் என்ன பாக்க Hospital கு வந்தாரு! சிபிராஜ் உருக்கம்
இந்தி படங்களுக்கு நோ
இந்தி சினிமாவில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனக்கான நட்சத்திர அந்தஸ்த்து இங்கே தான் உள்ளது என்றும், தெலுங்கு சினிமாவில் நடிப்பது தான் தனக்கு கம்ஃபர்ட் என்றும் கூறினார். மேலும், பாலிவுட்டில் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அதிரடி காட்டி உள்ளார்.
ஏகப்பட்ட வாய்ப்புகள்
இதுவரை பல பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தனக்கு வந்ததாகவும், பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தன்னை அணுகியதாகவும் கூறிய மகேஷ் பாபு, ஆனால், நான் அவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டேன் என்று ஒரே போடாக போட்டுள்ளார்.
சம்பளம் தர முடியாது
அனைத்திற்கும் மேலாக பாலிவுட் சினிமாவால் எனக்கான சம்பளத்தை தர முடியாது என்றும், நானும் என் நேரத்தை அதற்காக வீணடிக்க விரும்பவில்லை. டோலிவுட் சினிமாவில் நடித்துக் கொண்டே இந்திய சினிமா ரசிகர்களை எந்த அளவுக்கு மகிழ்விக்க முடியுமோ அந்த அளவுக்கு மகிழ்வித்துக் கொண்டிருப்பேன் என மகேஷ் பாபு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மகேஷ் பாபு சம்பளம் எவ்வளவு
இந்தி திரையுலகத்தால் தனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாது என நடிகர் மகேஷ் பாபு கூறிய நிலையில், ஒரு படத்துக்கு அவர் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை 60 கோடி ரூபாய் வரை படங்களுக்கு வாங்கி வந்த மகேஷ் பாபு சமீப காலமாக 80 கோடி ரூபாயை சம்பளமாக வாங்குகிறாராம்.
கான்களுக்கே அவ்வளவு தான்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான் மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே ஒரு படத்துக்கு 80 கோடி ரூபாய் வரையில் தான் வாங்குகின்றனர் என்றும் அதனால் தான் மகேஷ் பாபு அப்படி சொல்லி இருக்கிறார் என்றும் அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு 100 கோடி சம்பளம் வழங்கப்படப் போவதாகவும் கூறுகின்றனர்.